ADDED : ஜூலை 05, 2025 03:39 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த கனங்கூரை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் பிரகாஷ்ராஜ், 24; இவர், சின்னசேலத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். கடந்த மே மாதம் 13ம் தேதி வழக்கம்போல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற பிரகாஷ்ராஜ் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பிரகாஷ்ராஜ் கிடைக்கவில்லை. மாயமான தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி தீபிகா போலீசில் புகார் அளித்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.