Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வியாபாரிகள் சங்க கட்டடம் திறப்பு

வியாபாரிகள் சங்க கட்டடம் திறப்பு

வியாபாரிகள் சங்க கட்டடம் திறப்பு

வியாபாரிகள் சங்க கட்டடம் திறப்பு

ADDED : பிப் 29, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
ரிஷிவந்தியம் - வாணாபுரம் அனைத்து வியாபாரிகள் சங்க கட்டட திறப்பு விழா நடந்தது.

தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தீபா அய்யனார், துணை தலைவர் வசந்தி ராஜா, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்ணன் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அசோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா பங்கேற்று கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில், 'அனைத்து வணிகர்களும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயனடைய வேண்டும். அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது பெயர் பலகையை தமிழில் அமைக்க வேண்டும். வரும் 5 ம் தேதி மதுரையில் நடக்கும் 41வது மாநில வணிக விடுதலை முழக்க மாநாட்டில் அனைத்து வணிகர்களும், நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்' என்றார்.

முன்னதாக மாநில செயலாளர் சண்முகம் பேரமைப்பு கொடியேற்றினார். மாவட்டத் தலைவர் முகமது கனி, நிர்வாகிகள் இளங்கோவன், சங்கர் அமிர்தகண்டேசன், ஏழுமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் துரைமுருகன், பெருமாள், பாரதிதாசன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, அ.தி.மு.க., நிர்வாகிகள் அமுதா, சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us