/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை பள்ளி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : செப் 20, 2025 06:54 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே காணாமல் போன பள்ளி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனியைச் சேர்ந்தவர் 16 வயது பிளஸ் 1 மாணவி. இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


