/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கரும்பு வயலில் பெண் சாவு போலீஸ் விசாரணைகரும்பு வயலில் பெண் சாவு போலீஸ் விசாரணை
கரும்பு வயலில் பெண் சாவு போலீஸ் விசாரணை
கரும்பு வயலில் பெண் சாவு போலீஸ் விசாரணை
கரும்பு வயலில் பெண் சாவு போலீஸ் விசாரணை
ADDED : பிப் 02, 2024 04:03 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கரும்பு வயலுக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்.
திருக்கோவிலுார் அடுத்த நரியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகர் மனைவி சரசு, 48; நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு கணவன் மனைவி இருவரும் வயலுக்குச் சென்ற நிலையில், பக்கத்து கரும்பு வயலில் வைத்திருந்த படுதாவை எடுப்பதற்காக சரசு சென்றார்.
வெகு நேரம் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த குணசேகர் தனது மகன் சுந்தரம், 19; தகவல் தெரிவித்து வரவழைத்து பார்த்தபோது, கரும்பு வயலுக்குள் சரசு மயங்கி விழுந்து கிடந்தது தெரியவந்தது. உடன் திருக்கோவிலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, சரசு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


