ADDED : மே 29, 2025 01:26 AM
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அருகே, வாணாபுரம், அத்தியூரை சேர்ந்தவர் பாபு மகள் சுபஸ்ரீ,21; நர்சிங் படித்து முடித்துள்ளார். கடந்த, 22ம் தேதி கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றவர் திரும்பவில்லை.
குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தரக்கோரி, தாய் அமுதா புகார் அளித்தார்.
அதன்பேரில், பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


