Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நிவாரண உதவி வழங்கல்

நிவாரண உதவி வழங்கல்

நிவாரண உதவி வழங்கல்

நிவாரண உதவி வழங்கல்

ADDED : அக் 13, 2025 12:21 AM


Google News
Latest Tamil News
திருவெண்ணெய்நல்லுார்; பாம்பு கடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான நிவாரண நிதி காசோலையை மணிகண்ணன் எம்.எல்.ஏ., வழங்கினர்.

உளுந்துார்பேட்டை அடுத்துள்ள எல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் விநாயகமூர்த்தி, 23; பட்டதாரி. இவர் விவசாய நிலத்திற்கு சென்ற போது பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வழியில் இறந்தார்.

உயிரிழந்த விநாயகமூர்த்தி குடும்பத்திற்கு முதல்வர் பொது நிதியிலிருந்து அறிவித்த 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மணிகண்ணன் எம்.எல்.ஏ., குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் சுதாகர், வருவாய் ஆய்வாளர் வனிதா, வி.ஏ.ஓ., பவுல்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us