Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நிவாரண நிதி வழங்கல்

நிவாரண நிதி வழங்கல்

நிவாரண நிதி வழங்கல்

நிவாரண நிதி வழங்கல்

ADDED : அக் 14, 2025 05:11 AM


Google News
Latest Tamil News
சங்கராபுரம்; ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு ரூ. 3 லட்சத்திற்கான நிவாரண நிதி காசோலை வழங்கப்பட்டது.

சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமம் மூப்பனார் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் சவுமியா,14; இவர் கடந்த 10ம் தேதி பூட்டை கிராம எல்லையில் உள்ள ஆற்றில் துணி துவைத்துக்கொண்டிருந்தபோது, வலிப்பு ஏற்பட்டு ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழிந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறுமியின் குடும்பத்திரை நேரில் சந்தித்து நிவாரண நிதி உதவி காசோலையை வழங்கினார்.

சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், செயலாளர் கதிரவன், தாசில்தார் வைரக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us