Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சன்மார்க்க நல்லொழுக்க எழுச்சி பயிலரங்கம்

சன்மார்க்க நல்லொழுக்க எழுச்சி பயிலரங்கம்

சன்மார்க்க நல்லொழுக்க எழுச்சி பயிலரங்கம்

சன்மார்க்க நல்லொழுக்க எழுச்சி பயிலரங்கம்

ADDED : பிப் 01, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சன்மார்க்க நல்லொழுக்க எழுச்சி பயிலரங்கம் நடந்தது.

வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ரோட்டரி தலைவர் நடராஜன், இன்னர்வில் கிளப் தலைவி கவுரி, ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, மன்ற தணிக்கையாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர்.

மன்ற பொருளாளர் முத்துகருப்பன் வரவேற்றார்.

புதுச்சேரி சுங்கம் மற்றும் கலால் உதவி ஆணையர் சண்முக சுந்தரம் வள்ளலார் ஓர் புரட்சித்துறவி தலைப்பிலும், சிதம்பரம் அருள் பிரகாசம் வள்ளலார் நேற்று இன்று நாளை தலைப்பிலும், தீபா வள்ளலார் ஓர் அறிமுகம் தலைப்பிலும் பேசினர்.

ரோட்டரி முன்னாள் துணை ஆளுனர் ராஜேந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் விஜயகுமார், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

13 கல்வி நிறுவனங்களை சேர்ந்த 490 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். லட்சுமிபதி தலைமையில் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டி மன்றம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us