ADDED : ஜன 28, 2024 06:36 AM
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் மகனை காணவில்லை என்று தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கே.ஏ.ஜி., நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தாமோதரன், 27; கடந்த 5 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தாமோதரன் உள்ளார். கடந்த 24ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும், அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.