Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா

 திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா

 திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா

 திருக்கோவிலுாரில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா

ADDED : டிச 03, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசி விழாவில் ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதி உலா நடந்தது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று முன்தினம் பஞ்ச சம்ஸ்காரம், பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகலீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருள, ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கைசிக புராணம் வாசித்தார்.

தொடர்ந்து 8:30 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து ஜீயர் மடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us