Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சப் இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் திடீர் மாற்றம் 

சப் இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் திடீர் மாற்றம் 

சப் இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் திடீர் மாற்றம் 

சப் இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் திடீர் மாற்றம் 

ADDED : ஜன 27, 2024 12:50 AM


Google News
கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 27 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், லோக்பசா தேர்தலை முன்னிட்டு பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் 27 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கள்ளக்குறிச்சியில் பணிபுரிந்த சத்தியசீலன் சங்கராபுரம் ஸ்டேஷ்னுக்கும், நரசிம்மஜோதி சின்னசேலத்திற்கும், குணசேகரன் ரிஷிவந்தியத்திற்கும், நந்தகோபால் திருக்கோவிலுாருக்கும், சேகர் மூங்கில்துறைப்பட்டுக்கும், சடையப்பிள்ளை சங்கராபுரத்திற்கும், ஜெயமணி திருக்கோவிலுார் மகளிர் காவல் நிலையம் என மொத்தம் 27 சப் இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us