ADDED : அக் 09, 2025 02:23 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் மகளிர் திட்ட மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் முதல்வரின் காலை உணவுத் திட்டம், வங்கிக் கடன், சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி வழங்குதல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் உதவித் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


