Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

ADDED : அக் 08, 2025 11:24 PM


Google News
திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த சோமாசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம், 65; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு செல்வதற்காக பண்ருட்டி - சேந்தநாடு சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது பண்ருட்டி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஏகாம்பரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஏகாம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநாவலுார் போலீசார் உடலை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அவரது மகன் சிவகண்டன் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us