ADDED : ஜூலை 30, 2024 07:21 AM
திரு.வி.க. நகர்: பெரம்பூர் - மாதவரம் நெடுஞ்சாலை, 2வது லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 39. இவர், தன் ஆட்டோவை, ஆன்லைன் சேவையான 'ராபிடோ'வில் இணைத்து ஓட்டி வருகிறார். கடந்த மே 6ம் தேதி சவாரி முடித்து, வீட்டின் எதிரே ஆட்டோவை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது, ஆட்டோ திருடு போனது தெரிந்தது.
இது குறித்து திரு.வி.க.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த முகமது ரஹீம், 20, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.