Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலை வளைவுகளில் சரிந்து கிடக்கும் தடுப்பு

சாலை வளைவுகளில் சரிந்து கிடக்கும் தடுப்பு

சாலை வளைவுகளில் சரிந்து கிடக்கும் தடுப்பு

சாலை வளைவுகளில் சரிந்து கிடக்கும் தடுப்பு

ADDED : ஜூலை 23, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராம கூட்டு சாலையில் இருந்து, வளத்துார் கிராமத்தின் வழியாக, புரிசை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், 12க்கும் மேற்பட்ட இடங்களில் அபாயகரமான வளைவுகள் உள்ளன.

இந்த வளைவுகளில், விபத்து ஏற்படுத்தும் வகையில் இருக்கும் ஏரிக்கரை ஓட்டிய வளைவுகளுக்கு, இரும்பிலான தடுப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த இரும்பு கம்பிகள் சரிந்து கிடப்பதால், கம்பிகள் திருடு போகும் அபாயம் மற்றும் வளைவுகளில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, சாலை வளைவு ஓரம் சரிந்து கிடக்கும் தடுப்புகளை மீண்டும் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துஉள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us