Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ரோந்து போலீசாரிடம் சிக்கிய கஞ்சா விற்பனையாளர்

ரோந்து போலீசாரிடம் சிக்கிய கஞ்சா விற்பனையாளர்

ரோந்து போலீசாரிடம் சிக்கிய கஞ்சா விற்பனையாளர்

ரோந்து போலீசாரிடம் சிக்கிய கஞ்சா விற்பனையாளர்

ADDED : ஜூன் 10, 2024 05:00 AM


Google News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, செங்கழுநீரோடை வீதியில், போலீசார் நேற்று ரோந்து சென்றபோது, கவர் ஒன்றில் வைத்துக் கொண்டு கஞ்சா விற்ற, பிரவீன்குமார், 52, என்பவரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

அவரை சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us