/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காவணிப்பாக்கம் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல் காவணிப்பாக்கம் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்
காவணிப்பாக்கம் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்
காவணிப்பாக்கம் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்
காவணிப்பாக்கம் நிழற்குடை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 30, 2024 07:03 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காவணிப்பாக்கம் கிராமம். இக்கிராம பேருந்து நிறுத்தத்தில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை, சிதிலமடைந்து காணப்படுகிறது.
மழைக்காலத்தில் நிழற்குடை கட்டடத்திற்குள் அதிகமான மழை நீர் சொட்டுகிறது. இதனால், அப்பகுதி மாணவ - மாணவியர் மற்றும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர், நிழற்குடை இருந்தும், பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே, காவணிப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், புதிதாக பயணியர் நிழற்குடை கட்டடம் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.