Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சாலையோரம் இரும்பிலான தடுப்பு அமைப்பு

சாலையோரம் இரும்பிலான தடுப்பு அமைப்பு

சாலையோரம் இரும்பிலான தடுப்பு அமைப்பு

சாலையோரம் இரும்பிலான தடுப்பு அமைப்பு

ADDED : ஜூன் 11, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் இருந்து, 2.5 கி.மீ., துாரம் பொன்னேரிக்கரை சாலை உள்ளது. 1.30 கோடி ரூபாய் செலவில், இந்த சாலை சீரமைப்பு பணிகள் கடந்த ஜனவரி மாதம் நிறைவு பெற்றது.

இந்த சாலை போடும் பணியால், சாலையின் இடது புறம் ஓரம் இருந்த தடுப்பு கம்பி மற்றும் மீடியனின் உயரமும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நகருக்குள் செல்லும் வாகனங்கள், மீடியனை தாண்டி செல்லும் அபாயம் மற்றும் சாலையோரம், தடுப்பு கம்பி உயரமாக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை ஏற்று, நெடுஞ்சாலைத் துறையினர், சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியை அகற்றிவிட்டு, உயரமான தடுப்பு அமைத்து உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us