Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சிபுரத்தில் வரும் 19ல் நடக்கிறது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வரும் 19ல் நடக்கிறது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வரும் 19ல் நடக்கிறது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

காஞ்சிபுரத்தில் வரும் 19ல் நடக்கிறது விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ADDED : செப் 17, 2025 12:59 AM


Google News
காஞ்சிபுரம்:விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும், 19ல் நடக்க இருப்பதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச் செல்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப்டம்பர் மாதத்திற்கான, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 19ல், கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், காலை, 10:30 மணிக்கு, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

வேளாண் துறை, தோட்டக்கலை, மின்வாரியம், வருவாய்த் துறை, கூட்டுறவு, கால்நடை என, வேளாண் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நேரடியாகவும், மனுவாகவும் தெரிவிக்கலாம்.

எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us