ADDED : ஜன 31, 2024 09:38 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி கிராமத்தில் பி.டி.லீ.,செங்கல்வராய நாயக்கர் ஐ.டி.ஐ., வளாகம் உள்ளது. இங்கு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம், நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, போதைப்பொருள் தடுப்பு பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
போதைப்பொருளால் ஏற்படும் தீமைகளை குறித்து, ஐ.டி.ஐ., மாணவர்கள் இடையே போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மகேஷ் எடுத்துரைத்தார்.
ஊவேரி பி.டி.லீ.,செங்கல்வராய நாயக்கர் ஐ.டி.ஐ., முதல்வர் சத்தியராஜ் வரவேற்றார்.


