/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதிபோதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி
போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி
போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி
போதிய பஸ்கள் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் 2வது நாளாக அவதி

போக்குவரத்து முடக்கம்
அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் திடீரென பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜி.எஸ்.டி., சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வாக்குவாதம்
கிளாம்பாக்கம் வர வேண்டிய பேருந்துகள், அந்த நெரிசலில் சிக்கி, ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன. இதனால், கிளாம்பாக்கத்தில் இருந்து இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கிளாம்பாக்கம் செல்வதே அவதி: பழனிசாமி குற்றச்சாட்டு
கிளாம்பாக்கத்தில் பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே, அதற்கு கருணாநிதி
பேருந்து நிலையம் என 'ஸ்டிக்கர்' ஒட்டி, அவசரகதியில், தி.மு.க., அரசு
திறந்தது. சென்னைவாசிகளை, அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து கிளாம்பாக்கம்
பேருந்து நிலையம் செல்வதையே பெரும் சிரமமாக கருத வைத்துவிட்டது தி.மு.க.,
அரசு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் மாநகர பேருந்துகளை
இயக்கியும், உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும்,
உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
மக்கள் போராட்டம் வெடிக்கும்: அண்ணாமலை எச்சரிக்கை
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து 40 நாட்களாகியும், பயணியர் எதிர்கொள்ளும் பிரச்னை தினமும் தொடர்கிறது. வெள்ளிக்கிழமை இரவு, திருச்சி, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல, போதிய பேருந்துகளை இயக்காததால், நள்ளிரவில் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மறியல் போராட்டம் செய்தும், பேருந்துகளை சிறைபிடித்தும், தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். திராவிட மாடல், விடியல் என்ற நாடகங்களை நிறுத்தி, தங்கள் நிர்வாக தோல்வியை ஒப்புக்கொண்டு, அதை சரி செய்வதற்கான முயற்சிகளில், தி.மு.க., அரசு ஈடுபட வேண்டும். மக்களை தொடர்ந்து அவதிக்குள்ளாக்கினால் அவர்களின் போராட்டம், சென்னை முழுக்க பெருமளவில் வெடிக்கும்.