Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வேகவதி ஆற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

வேகவதி ஆற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

வேகவதி ஆற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

வேகவதி ஆற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம்

ADDED : ஜன 16, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் நகரை ஒட்டி செல்லும் வேகவதி ஆற்றில், ஆயிரக்கணக்கான ஆக்கிரமிப்புகள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. ஏற்கனவே ஆற்றின் பல்வேறு பகுதிகள் மாசடைந்த நிலையில், குப்பை கழிவுகள் கொண்ட மூட்டைகள், ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே செல்லும் வேகவதி ஆற்றில், குப்பை கழிவுகள் கொண்ட பல மூட்டைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகின்றன.

வேகவதி ஆற்றை பராமரிக்க வேண்டிய நீர்வள ஆதாரத் துறையினர், ஆற்றை பராமரிப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதேபோல, ஓரிக்கை பகுதியில், வேகவதி ஆறு குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.

தேனம்பாக்கம் பகுதியிலும் ஆற்றின் இருபுறங்களிலும் கழிவு நீர் திறந்து விடப்படுகிறது.

இதுபோல, வேகவதி ஆற்றின் பல்வேறு இடங்கள் நாசமாகி வரும் நிலையில், நீர்வள ஆதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us