Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நிலத்தடி குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

நிலத்தடி குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

நிலத்தடி குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

நிலத்தடி குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

ADDED : அக் 13, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சாலை தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

காஞ்சிபுரத்தில் 1,060 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு பாலாறு, திருப்பாற்கடல் மற்றும் வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக, மாநகராட்சி சார்பில், குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் சாலை தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதனால், அப்பகுதியில் மண் அரிப்பு ஏறபட்டு சாலை சேதமாகும் நிலை உள்ளதோடு, குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, சாலை தெருவில் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us