Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகும் கம்பிகள்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகும் கம்பிகள்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகும் கம்பிகள்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகும் கம்பிகள்

ADDED : பிப் 12, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் பயனாளிகள் வீடு கட்டுவதற்கான கம்பிகள் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு வழங்கப்படும் கம்பிகள் காஞ்சிபுரம் -- வேலுார் சாலை, சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பு இல்லாமல் மண்தரையில் போடப்பட்டுள்ளது.

மழை மற்றும் காற்றின் ஈரப்பதம் காரணமாகவும், மண்ணில் புதைந்தும் கம்பிகள் துருப்பிடித்துள்ளதால், நாளடைவில் கம்பிகள் வீணாகும் நிலை உள்ளது.

இதனால், இந்த கம்பிகளை பயன்படுத்தி பயனாளிகள் வீடு கட்டினால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. மேலும், இரவு நேரத்தில் கம்பிகள் திருடு போகும் சூழலும் உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி போடப்பட்டுள்ள கம்பிகளை கிடங்கில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us