Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/விவசாய சங்கத்தினர் பேரணி

விவசாய சங்கத்தினர் பேரணி

விவசாய சங்கத்தினர் பேரணி

விவசாய சங்கத்தினர் பேரணி

ADDED : ஜன 27, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நேற்று டிராக்டர் மற்றும் டூ - வீலரில் விழிப்புணர்வு பேரணியை காஞ்சியில் நடத்தினர்.

இந்த பேரணிக்கு, தமிழ்நாடு விவசாய சங்க செயலர் நேரு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேரணியை துவக்கி வைத்தார். பேரணி, காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து, மூங்கில் மண்டபம், காந்தி ரோடு வழியாக, ரங்கசாமி குளத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில், பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், மின்சாரம் தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us