Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காய்ந்த புற்களில் தீ எறையூரில் புகை மூட்டம்

காய்ந்த புற்களில் தீ எறையூரில் புகை மூட்டம்

காய்ந்த புற்களில் தீ எறையூரில் புகை மூட்டம்

காய்ந்த புற்களில் தீ எறையூரில் புகை மூட்டம்

ADDED : மார் 25, 2025 07:58 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், எறையூர் கிராமம் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், வல்லம் அருகே பிரிந்து செல்லும் எறையூர் செல்லும் சாலையோரம் பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளன.

தற்போது, கோடை பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறையால், விவசாயம் நடைபெறவில்லை. இந்த நிலையில், விளைநிலங்களில் உள்ள காய்ந்த புற்களில் நேற்று மதியம் 1:00 மணியளவில் தீப்பற்றி எரிய துவங்கியது.

இதையடுத்து, காட்டுத்தீ போல மளமளவென அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால், அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது.

சிறிது நேரத்திற்கு பின், தீ தானாகவே கட்டுக்குள் வந்து அணைந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us