Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

ADDED : ஜூன் 18, 2025 09:28 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மஹா ருத்ரேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மாதனம்பாளையம் தெருவில் மாணிக்க விநாயகர், காமாட்சியம்மன் உடனுறை மஹா ருத்ரேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் 27 ஆண்டுகளுக்குப் பின், அனைத்து சன்னிதிகளுக்கும் புதிதாக விமானம், புதிய ராஜகோபுரம், பிரகாரங்களில் கருங்கல் தரைதளம், புதிய உத்சவ விக்ரஹகம் என, பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

இதையொட்டி கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதில், காலை 9:00 மணிக்கு மூலவருக்கு பால், தேன், தயிர், விபூதி, சந்தனம், இளநீர், ஜவ்வாது, பஞ்சாமிர்தம் உள்ளிட்டவையால் அபிஷேக அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us