Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குழாய் பதித்ததால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குழாய் பதித்ததால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குழாய் பதித்ததால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

குழாய் பதித்ததால் சேதமான சாலை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ADDED : செப் 26, 2025 03:56 AM


Google News
Latest Tamil News
ஓரிக்கை,:காஞ்சிபுரம் ஓரிக்கை, சின்ன அய்யங்குளம் பிரதான சாலையில், பாதாள சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டியதால் சேதமான சாலையை 'கான்கிரீட்' கலவை மூலம் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை, சின்ன அய்யங்குளம் பிரதான சாலை, ஜோகிர் காலனி அருகில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு உள்ளது.

பள்ளம் தோண்டியதால், சேதமான சாலையை முறையாக சீரமைக்காமல் பெயரளவிற்கு பள்ளத்தில் மண் கொட்டி மூடியுள்ளனர். இதனால், கனரக வாகனம் சென்றதால், மண் கொட்டி மூடப்பட்ட சாலை மேடு, பள்ளமாக மாறியுள்ளது.

இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, ஓரிக்கை, சின்ன அய்யங்குளம் பிரதான சாலை, ஜோகிர் காலனி அருகில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியதால், சேதமான சாலையை 'கான்கிரீட்' கலவை மூலம் சீரமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us