Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோரைப்புல் வளர்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

கோரைப்புல் வளர்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

கோரைப்புல் வளர்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

கோரைப்புல் வளர்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

ADDED : அக் 13, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
புத்தேரி:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரியில் கோரைப்புல் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாயில், கோரைப்புல், செடி, கொடிகள் வளர்ந்து கால்வாய் என்பதற்கான அடையாளமே தெரியாமல் உள்ளது.

இதனால், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் புத்தேரியில் கோரைப்புல், வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us