Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோதண்டராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் துவக்கம்

கோதண்டராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் துவக்கம்

கோதண்டராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் துவக்கம்

கோதண்டராமர் கோவிலில் ராமநவமி உற்சவம் துவக்கம்

ADDED : மார் 27, 2025 08:12 PM


Google News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில், கோதண்டராமர் பஜனை கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், 13 நாட்கள் நடைபெறும் ராமநவமி உற்சவம் துவங்கியது.

விழாவையொட்டி தினமும், இரவு 7:00 மணிக்கு சொற்பொழிவு நடைபெறுகிறது. அதன்படி, முதல் நாளான நேற்று, ராமவதார வைபவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.

இன்று, இரவு 7:00 மணிக்கு கீதா கல்யாணம், நாளை காகுத்தனும், குகப்பெருமானும், வரும் 30ல், பாதுகையும் பரதாழ்வானும், 31ல் ஜடாயு மோட்சமும், சபரிபக்தியும், ஏப்., 1ல் வாலி மோட்சமும், சுக்ரீவ பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.

ஏப்.,2ல் சிறிய திருநவடி கடல்தாவு படலம், ஏப்.,3ல் திருவடி தொழுத படலம், ஏப்., 4ல் விபீடண சரணாகதியும், முடிசூடலும், ஏப்., 5ல் ராமர் பட்டாபிஷேகம் ஆகிய தலைப்புகளில், ஆன்மிக சொற்பொழிவாளர்களான கலைச்செல்வி, விஜயா ராகவன், பிரமிளகுமாரி, தெய்வசிகாமணி, பத்மாவதி ஆகியோர் சொற்பொழிவாற்றுகின்றனர்.

ஏப்., 6ம் தேதி, காலை, ராமநவமி ஏகதின லட்சார்ச்சனையும், மாலை சீதா ராமர் திருக்கல்யாண உற்சவமும், இரவு அனுமந்த வாகனத்தில் புறப்பாடும் நடக்கிறது.

ஏப்., 7ம் தேதி, காலை 6:00 மணிக்கு கோபூஜையும், இரவு 7:00 மணிக்கு அனுமனின் அற்புதங்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவும், 8ம் தேதி, மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவமும் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us