/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாநில கட்டுரை போட்டி காஞ்சி மாணவியர் தேர்வு மாநில கட்டுரை போட்டி காஞ்சி மாணவியர் தேர்வு
மாநில கட்டுரை போட்டி காஞ்சி மாணவியர் தேர்வு
மாநில கட்டுரை போட்டி காஞ்சி மாணவியர் தேர்வு
மாநில கட்டுரை போட்டி காஞ்சி மாணவியர் தேர்வு
ADDED : மே 12, 2025 12:43 AM
காஞ்சிபுரம்,:செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லுாரியைச் சேர்ந்த 50 மாணவ - மாணவியர், 'முத்தமிழ் அறிஞர் கலைஞரின் கடித இலக்கியம்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டியில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் காஞ்சிபுரம் சோழன் கல்வியியல் கல்லுாரி மாணவி வரலட்சுமி; எஸ்.எஸ்.கே.வி. கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி மாணவி நந்தினி; சுதா ஆகியோர் முறையே மூன்று இடங்களை கைப்பற்றினர். இவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.