/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 14, 2025 01:38 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகரில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழில்லாமல் சாலையில் கழிவுநீர் வழிந்தொடுகிறது.
ஒரே இடத்தில் தேங்கும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, கழிவுநீரை வெளியேற்ற கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.