Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சகதியில் சிக்கும் வாகனங்கள் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : மே 27, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு, பாலாஜி நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, மேன்ஹோல் கான்கிரீட் தொட்டி' அமைக்கப்பட்டுள்ளது. பள்ளத்தில் நிரப்பப்பட்டு மீதமான மண்ணை முழுமையாக அகற்றுவதில்லை. மேலும், பள்ளம் தோண்டப்பட்டதால், சேதமான சாலையையும் சீரமைக்கவில்லை.

காஞ்சிபுரத்தில் சில தினங்களாக பெய்த மழைக்கு, பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் தேங்கிய மழைநீரால் சாலை சகதியாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இலகுரக வாகனங்கள் சகதியில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. மேலும், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளும் சகதியில் செல்லும்போது வழுக்குவதால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, திருக்காலிமேடு பாலாஜி நகரில், பாதாள சாக்கடை பணியால், சேதமான சாலையை சமன்படுத்தி முறையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us