Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/ நாகர்கோவில் சிறையில் மோதல்; 13 கைதிகள் மீது வழக்கு

நாகர்கோவில் சிறையில் மோதல்; 13 கைதிகள் மீது வழக்கு

நாகர்கோவில் சிறையில் மோதல்; 13 கைதிகள் மீது வழக்கு

நாகர்கோவில் சிறையில் மோதல்; 13 கைதிகள் மீது வழக்கு

ADDED : செப் 30, 2025 08:14 AM


Google News
நாகர்கோவில்; நாகர்கோவிலில்உள்ள மாவட்ட சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதலில் இரண்டு பேர் காயமடைந்தனர். 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட சிறைச்சாலை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்ட போது திடீரென இரண்டு கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டு கைதிகளின் தரப்பைச் சேர்ந்தவர்களும் மோதிக்கொண்டனர்.

இதில் பேச்சியப்பன், முத்துராஜ் காயமடைந்தனர். சம்பவம் குறித்து ஜெயிலர் சம்பத் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் பாஸ்கர், இலங்கேஸ்வரன், வேல்முருகன், ஜெயபிரகாஷ், முத்துராஜ், நவீன் உட்பட 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாக்குதல் குறித்த விசாரணையும் நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us