Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவாகனங்கள் நிறுத்த எல்லைகோடு அவசியம்

கரூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவாகனங்கள் நிறுத்த எல்லைகோடு அவசியம்

கரூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவாகனங்கள் நிறுத்த எல்லைகோடு அவசியம்

கரூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவாகனங்கள் நிறுத்த எல்லைகோடு அவசியம்

ADDED : மார் 19, 2025 01:22 AM


Google News
கரூரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவாகனங்கள் நிறுத்த எல்லைகோடு அவசியம்

கரூர்:கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, வாகனங்களை சரியாக நிறுத்தும் வகையில், பெயிண்ட் மூலம் புதிதாக கோடு வரைய வேண்டும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் நகரில் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஜவஹர் பஜார், கோவை, தின்னப்பா கார்னர் சாலை மற்றும் லைட்ஹவுஸ் கார்னர் சாலைகளில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. அந்த சாலைகளில் கார், டூவீலர், வேன் உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள், நீண்ட நேரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

இதனால் கரூர் நகரப்பகுதிகளில், நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் வகையில், கரூர் நகரப்பகுதியில், கார் உள்ளிட்ட வாகனங்களை, ஒரு குறிப்பிட்ட எல்லை பகுதியில் நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில், சில மாதங்களுக்கு முன், சாலைகளில் பெயிண்ட் மூலம் கோடு போடப்பட்டது.

தற்போது, கோடுகள் அழிந்து விட்டன. இதனால், பொதுமக்கள் கார், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை, தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், கரூர் நகரப்

பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கரூர் நகரப்பகுதிகளில் முக்கிய சாலைகளில், புதிதாக வெள்ளை கோடு வரைந்து, வாகனங்களை முறையாக நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us