Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 20, 2025 01:07 AM


Google News
கரூர், கரூர், -கோவை சாலையில் உள்ள மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யூ.,), கரூர் மின் வட்ட கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் பெறுகின்ற குடும்ப நல நிதி, 5 லட்சம் ரூபாயை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ., நிர்வாகிகள் ஜீவானந்தம், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us