Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கரூர் மாவட்ட கலெக்டர் தகவல்

ADDED : ஆக 01, 2024 07:27 AM


Google News
கரூர்: காவிரியில், தண்ணீர் அதிக அளவு வரும்போது பாதிக்கப்படக்-கூடும் இடங்களில் நிவாரண முகாம் கள் தயார்நிலையில் உள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், கட்டளை, ரெங்கநாதபுரம், மாயனுார் கத-வணை உள்பட காவிரிக்கரையோரம் ஆகிய பகுதிகளில் முன்-னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். பின், அவர் கூறியதாவது: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடிப்பதால், மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர்வ-ரத்து அதிகமாக உள்ளதால், கரையோரங்களில் வசிக்கும் பொது-மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தொடர்ந்து அறிவு-றுத்தப்பட்டு வருவதோடு, தாழ்வான பகுதிகளில் வசிப்போரை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்-ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்பு மீட்-புப்பணிகள் துறை, போலீஸ், நீர்வளத்துறை உள்ளிட்ட துறை-யினர், காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும் அளவை இரவு பக-லாக தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒலிப்-பெருக்கி, செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் மூலமாக, பொது-மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் நீரில் இறங்கி குளித்தல், மீன்பிடித்தல், கால்நடைகளை குளிப்பாட்-டுதல் போன்ற நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். தண்ணீர் அதிக அளவு வரும்போது பாதிக்கப்படக்-கூடும் என கருதப்படும் புகழுர் தவிட்டுப்பாளையத்தில் இரு இடங்கள், குளித்தலை கே.பேட்டை, மண்மங்கலம் வட்டம் நெரூர் தெற்கு ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்நி-லையில் உள்ளது. இவ்வாறு கூறினார்.

ஆய்வின்போது, டி.ஆர்.ஓ., கண்ணன், பொதுப்பணித்துறை (நீர்-வள ஆதாரம்) உதவி செயற்பொறியாளர் கோபிகிருஷ்ணா உள்-பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us