Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்

கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்

கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்

கரூரில் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற விவசாய சங்கத்தினர்

ADDED : ஆக 01, 2024 07:27 AM


Google News
கரூர்: கரூரில், மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்ற, ஐக்கிய விவசா-யிகள் சங்கத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கரூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், நேற்று காலை தலைமை தபால் நிலையம் முன், மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்-கப்பட்டிருந்தது. ஆனால், போராட்டத்துக்கு, கரூர் டவுன் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து, ஐக்கிய விவ-சாயிகள் முன்னணி சார்பில், மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து, கோஷங்கள் எழுப்பபட்டன. ஆர்ப்-பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய பட்ஜெட் நகலை எரிக்க முயன்றனர். அவர்களை, கரூர் டவுன் டி.எஸ். பி., செல்வராஜ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், கரூர் தபால் நிலையம் முன், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us