ADDED : மார் 20, 2025 01:15 AM
மகன் மாயம்;தாய் புகார்
குளித்தலை: குளித்தலை அடுத்த, செம்பியாநத்தம், பஞ்., சின்னமுத்தாம்பாடியை சேர்ந்த பாப்பா, 57, விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மகன் ராஜா, 37. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தம்பதியரிதடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதில் இருந்து, மன
வருத்தத்தில் பாதிக்கப்பட்டு, மருத்துவர் ஆலோசனை படி மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். கடந்த, 4 காலை வீட்டில் இருந்தவர் பின்னர் காணவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகனை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


