Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ காரீப் பருவத்துக்கு 123 மெட்ரிக் டன் நெல் விதைகள் உள்ளது: கலெக்டர்

காரீப் பருவத்துக்கு 123 மெட்ரிக் டன் நெல் விதைகள் உள்ளது: கலெக்டர்

காரீப் பருவத்துக்கு 123 மெட்ரிக் டன் நெல் விதைகள் உள்ளது: கலெக்டர்

காரீப் பருவத்துக்கு 123 மெட்ரிக் டன் நெல் விதைகள் உள்ளது: கலெக்டர்

ADDED : ஜூலை 28, 2024 02:10 AM


Google News
கரூர்,:''நெல் பயிர் சாகுபடிக்காக, நடப்பு காரீப் பருவத்தில், 123 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.

அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட, பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக, நடப்பு காரீப் பருவத்துக்கு, 123 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் சிறுதானிய விதைகள், 47 ஆயிரம் டன் இருப்பில் உள்ளது. நடப்பாண்டு ஜூலை வரை, 219 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஜூன் மாதம் வரை, 1,632 ெஹக்டேர் பரப்பளவில், வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., க்கள் கண்ணன், விமல்ராஜ் (நிலம் எடுப்பு), வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி, ஆர்.டி.ஓ., க்கள் முகமது பைசல், தனலட்சுமி உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, விவசாயிகள் குறைதீர் கூட்ட த்தில், பல்வேறு அரசு துறைகள் சார்பில், ஐந்து விவசாயிகளுக்கு, ஐந்து லட்சத்து, 82 ஆயிரத்து, 320 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us