Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நெடுஞ்சாலை விரிவாக்க பணி:கள ஆய்வு செய்த குழுவினர்

நெடுஞ்சாலை விரிவாக்க பணி:கள ஆய்வு செய்த குழுவினர்

நெடுஞ்சாலை விரிவாக்க பணி:கள ஆய்வு செய்த குழுவினர்

நெடுஞ்சாலை விரிவாக்க பணி:கள ஆய்வு செய்த குழுவினர்

ADDED : ஜூலை 28, 2024 02:15 AM


Google News
கரூர்;கரூரில், மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலை துறை குழுவினர் கள ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையின், கரூர் கோட்ட பாராமரிப்பில் உள்ள வையம்பட்டி-கரூர் சாலை விரிவாக்கத்தை கள ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், திருப்பூர் சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் முருகபூபதி, உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ரோட்டின் தடிமன், தார் கலவை, பணிகளின் தரம், தன்மை உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டது.ஆய்வின் போது, கரூர் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us