Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூலை 26, 2024 02:30 AM


Google News
அரவக்குறிச்சி: சின்னதாராபுரம் சாலையில், கால்நடைகள் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

சின்னதாராபுரம் சாலை முக்கிய இணைப்பு சாலையாக உள்ளது. கரூரிலிருந்து தாராபுரம் செல்லும் போது, சின்னதாராபுரத்தை கடந்து செல்ல வேண்டும்.

இதே போல அரவக்குறிச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு செல்லும் போது சின்னதாராபுரத்தை கடந்து செல்ல வேண்டும். முக்கியசாலையாக உள்ள சின்னதாராபுரத்தில், கால்ந-டைகளை சாலையில் திரிய விடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்-குள்ளாகி வருகின்றனர்.

சில சமயங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும ஏற்படுகிறது. இதுகுறித்து, சின்னதாராபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நட-வடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us