Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

கரூர் மாயனுார் கதவணையில் முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

ADDED : ஜூலை 28, 2024 02:06 AM


Google News
கரூர்:கரூர் மாயனுார் கதவணையில், முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாவட்ட நீர்வள ஆதாரத்துறை சார்பில், 406.50 கோடி ரூபாய் மதிப்பில், கரூர் நஞ்சை புகளூர், நாமக்கல் மாவட்டம் அனிச்சம்பாளையம் இடையே, காவிரியாற்றின் குறுக்கே கதவணை பணி நடக்கிறது.

மாயனுாரில், காவிரி-வைகை--குண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.இந்த திட்ட பணிகளை, நீர்வள ஆதாரத்துறை சென்னை முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் தலைமையில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், புகளூரில் கதவணை, 79 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதி கட்ட பணிகளை ஆய்வு செய்தனர். பின், மாயனுாரில் நடக்கும் காவிரி-வைகை--குண்டாறு நதிகள் இணைப்பு திட்ட பணியில் கால்வாய் வெட்டும் பணியை பார்வையிட்டார்.மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கதவணையில், பாசனத்திற்காக டெல்டா பகுதிகளுக்கு காவிரி நீர் ஷட்டர்கள் மூலம் திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், கதவணையில் உள்ள நீர் நிலவரங்கள் மற்றும் கடைமடை பகுதி வரை செல்லும் காவிரி நீர் அளவீடுகள் குறித்து, நேரில் கள ஆய்வு பணிகளில் ஈடுபட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us