Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரங்கநாத சுவாமி கோவிலில்8ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில்8ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில்8ம் நாள் பகல் பத்து உற்சவம்

ரங்கநாத சுவாமி கோவிலில்8ம் நாள் பகல் பத்து உற்சவம்

ADDED : ஜன 08, 2025 03:03 AM


Google News
ரங்கநாத சுவாமி கோவிலில்8ம் நாள் பகல் பத்து உற்சவம்

கரூர்,:கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, எட்டாவது நாள் பகல் பத்து உற்வசம் நேற்று நடந்தது. கரூர், அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த, 31ல் தொடங்கியது. நேற்று எட்டாவது நாள், பகல் பத்து உற்சவம் நடந்தது. அதில், உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்

களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். நாளை மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், 10 அதிகாலை, 4:30 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பிறகு, ராப்பத்து உற்சவம் தொடங்க உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us