Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வெங்கடரமண சுவாமி கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

வெங்கடரமண சுவாமி கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

வெங்கடரமண சுவாமி கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

வெங்கடரமண சுவாமி கோவிலில் வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

ADDED : செப் 28, 2025 08:39 AM


Google News
கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், காத்திருந்து சுவாமியை வழிபட்டனர்.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், நேற்று இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல், முடி காணிக்கை செலுத்தவும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும், கோவிலை சுற்றி உள்ள திருமண மண்டபங்களில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us