/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் 6.24 ச.கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது: கலெக்டர் தகவல் மாவட்டத்தில் 6.24 ச.கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது: கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 6.24 ச.கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது: கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 6.24 ச.கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது: கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் 6.24 ச.கி.மீ., வனப்பரப்பு அதிகரித்துள்ளது: கலெக்டர் தகவல்
ADDED : செப் 26, 2025 01:45 AM
கரூர், : ''மாவட்டத்தில், வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு, 6.24 ச.கி.மீ., அதிகரித்துள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பசுமை தமிழ்நாடு தினம் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். பின், அவர் கூறியதாவது: தமிழகத்தின் பசுமை பரப்பை, 33 சதவீதம் அதிகரிக்கும் பொருட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தின் மொத்த புவியியல் பரப்பளவு, 2,904 சதுர கி.மீ., மாவட்டத்தின் வன பரப்பளவு, 6720.81 ஹெக்டேர். தமிழ்நாட்டிலேயே மிகவும் குறைவான வனப்பரப்பளவை கொண்ட மாவட்டமாக கரூர் இருந்தாலும், வனம் மற்றும் காடுகள் இல்லாத பகுதிகளில் பசுமை நிலப்பரப்பை அதிகரிக்க கடந்த, 3 ஆண்டுகளில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் 23.36 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, இந்திய வன நிலை அறிக்கையின்படி, கரூர் மாவட்டத்தில் மட்டும் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவு, 6.24 ச.கி.மீ., அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதின் இலக்கு, 9.77 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. வனத்துறையினரால் மட்டும், 4.38 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வன அலுவலர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.