/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஆராய்ச்சி மையத்தில் இன்று இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்ஆராய்ச்சி மையத்தில் இன்று இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
ஆராய்ச்சி மையத்தில் இன்று இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
ஆராய்ச்சி மையத்தில் இன்று இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
ஆராய்ச்சி மையத்தில் இன்று இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 19, 2025 01:52 AM
கரூர், கால்நடை மருத்துவ பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இன்று (19ல்) இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம் தொடங்குகிறது.
இதுகுறித்து, ஆராய்ச்சி மைய நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் பண்டுதகாரன்புதுார் கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
நடக்கிறது.
அதில், கறவை மாடு வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், கறவை மாடு இனங்கள், கொட்டகை அமைத்தல், கறவை மாடுகளுக்கான தீவனம் தயாரித்தல், கறவை மாடுகளை தாக்கும் நோய்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பேசுகின்றனர். மேலும், செயல்முறை விளக்கம், படக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 73390-57073, 04324-294335 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு
செய்யலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.