/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவை கணக்கெடுப்பு
ADDED : மார் 17, 2025 04:16 AM
கரூர்: தமிழகம் முழுவதும், ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்-தாண்டு மார்ச், 9ல் ஈர நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்-தது.
நேற்று, நிலப்பரப்புகளில் வாழும் பறவைகளின் கணக்கெடுப்பு பணி நடந்தது. இங்கு, பறவைகளின் எண்ணிக்கை, இனங்கள், எந்தெந்த பகுதிகளில் எவ்வகையான பறவையினங்கள் வாழ்கின்-றன என்பன போன்ற தகவல்கள் கணக்கெடுக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில், கடவூர் வனப்பகுதி, குளித்தலை மணத்தட்டை, ராஜேந்திரம், சின்ன தாதம்பாளையம் உள்ளிட்ட காப்புக்காடுகள், நொய்யல், புகழூர் உள்ளிட்ட சம நிலப்பரப்புகளில், மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமையில், பறவைகள் கணக்கெ-டுப்பு பணி நடந்தது. கரூர் வனக்கோட்ட களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லுாரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் என, 100 பேர் பங்கேற்றனர். அது மட்டுமின்றி, ஐந்து இடங்களில் இரவு வாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்தது.