/உள்ளூர் செய்திகள்/கரூர்/ செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்
செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்
செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்
செழிப்பாக வளர்ந்துள்ள நிலக்கடலை செடிகள்
ADDED : டிச 02, 2025 02:16 AM
கிருஷ்ணராயபுரம், மேட்டுப்பட்டி பகுதியில், மானாவாரி விளை நிலங்களில் நிலக் கடலை செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளன.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, வேங்காம்பட்டி, வரகூர், குழந்தைப்பட்டி பகுதிகளில் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். கடலை சாகுபடிக்கு பருவ மழை பெய்வதால், தண்ணீர் பிரச்னை இன்றி செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. தற்போது விவசாய தொழிலாளர்களை கொண்டு, செடிகள் நடுவில் வளர்ந்த களைகளை அகற்றும் பணி நடந்தது.


