Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

ADDED : மார் 17, 2025 04:14 AM


Google News
குளித்தலை : குளித்தலை பஸ் ஸ்டாண்டில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்த நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை நகராட்சியின், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மிகவும் குறுகிய இடத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்-பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் திருச்சி, கரூர், கோவை மார்க்கமாக அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, முசிறி, பெரம்பலுார், துறையூர், சேலம் மார்க்கம் பஸ்கள், தரகம்பட்டி, கடவூர் உள்-ளிட்ட பல பகுதிக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன.

குறுகலான இடம்

மேலும், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வாடகை கார், ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளன. இதெல்லாம் போதாது என, பற்றாக்கு-றைக்கு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள்

அவ்வப்போது நடந்து வருகின்றன. இதனால் குறுகலான இடத்தில் பஸ் டிரைவர்கள், பொதுமக்கள் வந்து செல்ல கடும் சிர-மத்துக்குள்ளாகின்றனர்.

தடை விதிக்க வேண்டும்

எனவே, மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள் பாதிக்காத வகையில், குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்த நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us